Wednesday, October 30, 2013

தீபாவளி

அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் - என்.வி.எஸ்.


http://www.brahminsnet.com/forums/showthread.php/5629-

​தீபாவளி
நிர்ணய சிந்து—147:--- ""தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி"".

அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.

நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்
ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித
ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;

தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

கிழக்கு நோக்கி அமரவும். ஆச்வயுஜ க்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும். சுத்த ஜலத்தால் . தர்பணம் செய்யவும். மஞ்சள் கலந்த அக்ஷதை, பூணல் வலம். உபவீதம்.தேவ தர்பணம்.

யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாய ச, வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாயவை நம: இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.

1. யமாய நம: யமம் தர்பயாமி.
2. தர்மராஜாய நம; தர்மராஜம் தர்பயாமி
3. ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி.
4. அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி.

5. வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி
6. காலாய நம: காலம் தர்பயாமி.
7. சர்வபூத க்ஷயாய நம: ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி.
8. ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி.

9. தத்நாய நம: தத்நம் தர்பயாமி
10. நீலாய நம: நீலம் தர்பயாமி
11. பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி.
12. வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ராய நம: சித்ரம் தர்பயாமி

14. சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி..

ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ: என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.

Dear bmbcAdmin,
Thanks for Visiting Brahmins Net!
JAI HIND! Feel free to post whatever you think legal, moral and fun or useful!
Kindly invite your friends to this forum, if you feel it is worth!!
Click here to Invite Friends
Use Contact us only for Personal and Administrative purpose!



இதனால் பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..


தீபாவளி யன்று மாலையில் தீபம்

நிர்ணய சிந்து-141. " தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி சமாயுக்த: சர்வ பாபாபநுத்தயே"

தீபாவளியன்று மாலையில் தனது வீட்டிலும் பக்கத்திலுள்ள சிவா/ விஷ்ணு அம்பிகை கோவில்களிலும் நல்லெண்ணெய் விட்டு நான்கு திரிகள் போட்டு விளக்கு ஏற்றி மேற் கணடவாறு ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.

இதனால் நரக பயம் கிட்டாது. சந்தோஷமாக இருப்பார்கள்.

ஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது.; "ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: ஷக்த்யா தேவ க்ருஹேஷு சஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபிநா."